அதிர வைத்த ஆண், பெண் சடலம்... நடுங்கிய தர்மபுரி... யாரும் எதிர்பாரா அதிர்ச்சி திருப்பம்

Update: 2024-09-28 17:40 GMT

ஆன் லைன் டிரேடிங் வியாபாரம் மூலம் ஏராளமான சொத்து சேர்த்த வயதான தம்பதியைக் கொலை செய்தவர்களைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் அதியாமான்கோட்டையை அடுத்துள்ள சிப்காட் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் மற்றும் பெண் சடலங்களை கடந்த நான்கு நாட்களுக்கு முன் மீட்ட போலீசார் அது குறித்து விசாரணை நடத்தினர். அதில் தேனியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பிரமேலதா ஆகிய இருவரும் தான் உயிரிழந்து கிடந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் மணிகண்டன் ஆன் லைன் டிரேடிங் வியாபாரம் மூலம் சம்பாதித்து ஏராளமான சொத்துக்களைச் சேர்த்து இருக்கிறார்.மேலும் தங்களிடம் ஏராளமான கருப்புப் பணம் இருப்பதாகவும் அவற்றை மாற்றித் தர நம்பிக்கையான ஆட்கள் வேண்டு என்று தனது வீட்டில் வேலை செய்யும் ஊழியர்களிடம் கூறி இருக்கிறார் மணிகண்டன்.இதனைத் தொடர்ந்து மணிகண்டன் வீட்டில் வேலை செய்த ஊழியர்களே தம்பதிகளைக் கடத்தி சொத்துக்கள் மற்றும் பணத்தை தருமாறு சித்தராவதைச் செய்து அதன் பின்னர் அவர்களைக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இருவரின் சடலத்தைத் தர்மபுரியில் வீசிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகத் தர்மபுரியைச் சேர்ந்த கார் ஒட்டுநர் சபரி உட்பட ஏழு பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்