வீரப்பன் முதல் வீரமணி வரை..`என்கவுன்ட்டர்' வெள்ளத்துரையிடம் ரூ.5 லட்சம் பிடித்தம் செய்யப்படும்

Update: 2024-06-01 08:31 GMT

சந்தன கடத்தல் வீரப்பன் முதல் சென்னையை கதி கலங்க வைத்திருந்த பிரபல ரவுடி அயோத்தி குப்பம் வீரமணி வரை 12-க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்தவர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை. இதனிடையே, ஓய்வு பெறும் ஒருநாளுக்கு முன்னதாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருந்தார். 2013ம் ஆண்டு சிவகங்கையில் காவல் நிலைய மரண வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஏடிஎஸ்பி வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக

முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து, உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்