`டைம்ஸ் ஆப் இந்தியா ப்ராப்பர்ட்டி எக்ஸ்போ' தொடக்கம்

Update: 2024-09-28 16:01 GMT

சென்னை வர்த்தக மையத்தில், 'டைம்ஸ் ஆப் இந்தியா ப்ராப்பர்ட்டி எக்ஸ்போ' இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 'டைம்ஸ் ஆப் இந்தியா ப்ராப்பர்ட்டி எக்ஸ்போ'வில் 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் அரங்கம் அமைத்து, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீட்டு மனைகளை விற்பனை செய்கின்றன. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அரங்கம் அமைத்து, புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகள், விற்பனை ஆகாத வீடுகளை, விற்பனை செய்ய பிராப்பர்ட்டி எக்ஸ்போவில் பங்கு பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்