களைகட்டும் குலசை தசரா திருவிழா விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் தோன்றிய முத்தாரம்மன்

Update: 2024-10-05 06:52 GMT

திருச்செந்தூர் அருகே குலசை தசரா திருவிழாவின் இரண்டாம் நாளில், முத்தாரம்மன் விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் காட்சியளித்தார்.

குலசேகர பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பிறகு விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் காட்சியளித்த அம்மன், திருவீதி உலா சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்