கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. கோர்ட் எடுத்த திடீர் முடிவு

Update: 2024-09-27 10:47 GMT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த மாவட்ட நீதிபதி அப்துல்காதர் மதுரை நீதிமன்ற பதிவாளராக பணியிட மாற்றத்தில் சென்றதால், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டபட்டோர் தரப்பில் வாளையாறு மனோஜ் மட்டுமே ஆஜரானார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசாரும், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகினர். வழக்கை விசாரித்த பொறுப்பு நீதிபதி லிங்கம் வழக்கை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்