அடுத்தடுத்து...இந்தியாவை பரபரப்பாகிய செய்தி- உச்சகட்ட உஷார் நிலை!

Update: 2024-10-16 15:25 GMT

டெல்லியில் இருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு சிகாகோ புறப்பட்டுச் சென்ற போயிங் ரக ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து அந்த விமானம், கனடாவின் இகுவாலிட் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டு, வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அது வதந்தி என தெரியவந்த நிலையில், அங்கிருந்து சிகாகோ சென்றது. இதனிடையே, டெல்லி - சிகாகோ விமானம், மதுரை - சிங்கப்பூர் விமானம் உட்பட இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ஏழு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உயர்மட்ட ஆலோசனை நடத்தியது. அண்மைக்காலமாக சமூக வலைதள பக்கத்தில் இருந்து இதுபோன்று மிரட்டல் வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்