கல்லூரி ஹாஸ்டலில்அதிரடி சோதனை - வெளியான பகீர் பின்னணி

Update: 2024-09-28 15:38 GMT

ஓமலூர் உட்கோட்ட துணை காவல் கண்கனிப்பாளர் சஞ்சீவ்குமார் தலைமையில் ஒவ்வொரு பகுதியிலும் 50 போலீசார் வீதம் 3 குழுக்களாக பிரிந்து சோதனை செய்யப்பட்டது. சிக்கனம்பட்டி, பூசாரிப்பட்டி, தாரமங்கலம், ஆகிய பகுதிகளில் உள்ள விடுதி அறை, மாணவர்களின் பை, படுக்கை, பீரோ உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். மேலும், அறைகளில் போதை பொருள், புகையிலை போதை வஸ்து மற்றும் ஆயுதங்கள் இருக்கின்றதா என்பது குறித்தும், அறைகளில் மாணவர்கள் அல்லாத நபர்கள் யாரேனும் தங்கி இருக்கின்றனரா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்