பைக்கில் வந்த`கொக்கு' - பிடித்து, விசாரித்த போலீசுக்கு பெரிய ஷாக்கு

Update: 2024-10-07 09:12 GMT

ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சசிக்குமார் தலைமையிலான போலீஸ் குழு கே.எச்.மேம்பாலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வி.சி.மோட்டூர் கிராமத்தை சேர்ந்த கொக்கு என்ற புருசோத்தமன், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல ரக பைக்குகளை குறித்து வைத்து திருடியது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த நபரை கைது செய்த போலீசார், 10 லட்சம் மதிப்பிலான 8 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்