அதிகாரிகள் வைத்த செக் - வசமாக சிக்கிய கருப்பு ஆடுகள் - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

Update: 2024-07-16 16:22 GMT

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில்

குடியுரிமை பிரிவு அலுவலர்கள் முறைகேடுகளில்

ஈடுபடுவதை தடுக்க கண்காணிபு பிரிவு ஒன்று

செயல்படுகிறது. கண்காணிப்பின் போது சில தினங்களுக்கு

முன் குடியுரிமை அதிகாரி சரவணன் வெளிநாடுகளுக்கு

செல்லும் பயணிகளின் மற்றும் அங்கிருந்து திரும்பும்

பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதிக்கும் போது முறைகேடுகளில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. சென்னை சாஸ்திரி பவனில் உள்ள குடியுரிமை பிரிவு தலைமை ஆணையர், விமான நிலைய குடியுரிமை அலுவலர் சரவணனை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் குடியுரிமை பிரிவில் பணியாற்றும் மேலும் 2 அதிகாரிகள் பாஸ்போர்ட் ஆவணங்களை சரியாக ஆய்வு செய்யாமல் முறைகேடுகளில் ஈடுப்பட்டது தெரிய

வந்தது. இதையடுத்து இந்த இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தலைமை ஆனையர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்