தஞ்சாவூரை திக்..திக்.. பயத்திலே வைத்திருந்த `ஸ்கெட்ச்' சிக்கினார்

Update: 2024-09-25 10:12 GMT

#thanjavur #robbery

தஞ்சாவூரில் கலியமூர்த்தி என்பவரது வீட்டில் பீரோ உடைத்து, பூஜை அறையின் உண்டியலை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இதுதொடர்பாக குமரேசன், வேல்முருகன் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ஸ்கெட்ச் நாகராஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஏற்கனவே திருவாரூரில் கோவில் பூட்டை உடைத்து அய்யப்பன் சிலையை திருடியதும், மன்னார்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து லாக்கரை உடைத்ததும் தெரியவந்தது. மேலும் வேல்முருகன் மீது 18 வழக்குகளும், நாகராஜ் மீது 15 வழக்குகளும் இருப்பதும் தெரியவந்தது. 3 பேரிடமிருந்தும் நகை, பணம், கார், இருசக்கர வாகனம், லாக்கர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்