நாடு விட்டு நாடு வந்து.. தமிழ்நாட்டிற்கு அழகு சேர்த்த புதிய பறவைகள் | Thanthitv

Update: 2024-10-05 14:40 GMT

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு மழைக்காலங்களில் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வருவது வழக்கம். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பிக்கவுள்ளதை அறிவிக்கும் விதமாக, இலங்கையில் இருந்து கடற்காகங்கள் வந்துள்ளன. இவை, கோடியக்கரை கடற்கரையில் உலாவுவது காண்போரை கவர்கிறது. கோடியக்கரைக்கு அக்டோபர் முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பறவைகள் வரும் என்பதும், அவற்றில் முதலாவதாக இந்த கடற்பறவைகள் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்