ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோயிலில் தவறி கீழே விழுந்த மூதாட்டி

Update: 2024-09-21 17:14 GMT

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்து மூதாட்டி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அந்த மூதாட்டி கோவில் வாசலில் கதறிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர், அவரை பத்திரமாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்