தந்தி டிவியின் தாக்கம்... தேடி வந்த கலெக்டர் செய்த செயல் | Thanthi tv Impact

Update: 2024-09-19 07:19 GMT

தந்தி டிவி செய்தி எதிரொலியாக பார்வையற்ற பட்டதாரி பெண்ணின் வீட்டுக்கே தேடி சென்ற மாவட்ட ஆட்சியர் வீட்டுமனை பட்டாவும், வீடு கட்டுவதற்கான ஆணையையும் வழங்கினார்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழநெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி- ராஜேஸ்வரி தம்பதிகளின் மாற்றுத்திறனாளி மகள் சரண்யா. தந்தை இறந்தநிலையில், கண்பார்வையற்ற அவர் பள்ளி மற்றும் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பல்வேறு திறமைகள் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவித்த அவர் அரசு வேலையும், ஒரு வீடும் கட்டி தருமாறு அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தார். இந்த செய்தி தந்தி டிவியில் ஸ்டோரியாக ஒளிபரப்பாகியது. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று வீட்டு மனை பட்டாவும், ரூபாய் 3.5 லட்சம் மதிப்பிலான கலைஞரின் கனவு இல்லத்திற்கான ஆணையையும் வழங்கினார். சரண்யாவின் குடும்பத்தார்கள் தந்தி டிவிக்கு நன்றியை தெரிவித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்