தனியார் பள்ளி, கல்லூரிகளை அலறவிட்ட 72 வயது முதியவர்... விசாரணையில் திடுக் தகவல்

Update: 2024-06-30 09:42 GMT

தனியார் பள்ளி, கல்லூரிகளை அலறவிட்ட 72 வயது முதியவர்... விசாரணையில் திடுக் தகவல்

கடலூரில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில், வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி, பணம் பறித்த 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை சேர்ந்த 72 வயது முதியவர், ஞானசேகரன். இவர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று, தன்னை ஓர் வருமான வரித்துறை அதிகாரி என அறிமுகம் செய்துள்ளார், இதனையடுத்து நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று கூறி, பணப்பறிப்பிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, போலி பணி நியமன ஆணையையும் வழங்கியுள்ளார். பணி நியமன ஆணை போலி என்று தெரிந்ததும், அதிகாரியின் சாயம் வெளுத்தது. ஏமாந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஞானசேகரனை குறிஞ்சிப்பாடிக்கு வரவழைத்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்