உயிரை பறித்த மழை... கணவன் கண்முன்னே மண்ணுக்குள் புதைந்த மனைவி | Nilgirs | Rain | Landslide

Update: 2024-09-30 06:29 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர சுற்று வட்டாரப் பகுதிகளான அருவங்காடு, பர்லியார், காட்டேரி வெலிங்டன் ஆகிய பகுதிகளில் இரவு 8 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், குன்னூர் கிருஷ்ணாபுரம் லட்சுமி தியேட்டர் பின்புறம் வசித்து வரும், ரவி என்பவரது வீட்டின் முன் இருந்த மண் சரிந்து விழுந்தது. இதில் அவரது மனைவியான தனியார் பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தரப்பட்ட நிலையில், ஜெயலட்சுயின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்