கண்கட்டு வித்தை காட்டும் திருடர்கள்... நூதன முறையில் ஏடிஎம்களில் கைவரிசை - `உஷார் மக்களே.!'

Update: 2024-09-30 07:14 GMT

தொடர்ந்து 5 ஏடிஎம்களில் கைவரிசை காட்டிய நூதன கொள்ளையர்களால் கோவை கலங்ககிப் போயுள்ளது...

கோவையில் 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து ஏடிஎம் மையங்களுக்குள் சென்று எந்திரத்தில் பணம் வரும் இடத்தில் டேப் ஒட்டி நூதன முறையில் பணம் திருடி வருகின்றனர். பொதுமக்கள் கார்டை உட்செலுத்தி ரகசிய எண்ணை அழுத்திவிட்டு பணத்திற்கான தொகையையும் டைப் செய்து விட்டு காத்திருந்தால் பணம் வரும் இடத்தில் உள்ள டேப் ஓட்டப்படுவதால் பணம் நின்று விடும். பணத்தை எடுக்க வந்த பொதுமக்கள் பணம் வராததால் ஏமாற்றத்துடன் வங்கி அதிகாரிக்கு தகவல் தெரிவித்துச் சென்று விடுவர். அதன்பிறகு வெளியே காத்திருக்கும் 2 இளைஞர்களில் ஒருவர் உள்ளே சென்று டேப்பை எடுத்து வட்டு பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விடுவார். முதலில் இரத்தினபுரி பகுதியில் உள்ள ஏடிஎம் எந்திரத்தில் பணம் திருடப்பட்டது. இந்த நிலையில் அதே இளைஞர்கள் ஆவாரம்பாளையம், கருமத்தம்பட்டி, போத்தனூர் பகுதிகளிலும் ஏடிஎம் எந்திரத்தில் இதே முறையில் பணத்தை திருடி உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்