சாம்சங் விவகாரம்.. மேலும் ஒரு தொழிற்சங்கம் போராட்டம்?.. பரபரக்கும் காஞ்சி

Update: 2024-10-09 14:49 GMT

கைது செய்யப்பட்டுள்ள சாம்சங் நிறுவன ஊழியர்களை விடுவித்து, சுமூக முடிவு எட்டப்பட வேண்டும் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சங்கம் தொடங்க அனுமதி அளிக்காதது சர்வாதிகாரம், அது தொழிலாளர்களின் உரிமை என தெரிவித்தார். மேலும், தொழிலாளர்கள் பிரச்சினையில் சுமூக முடிவு எட்டப்படவில்லையென்றால், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படுமென எச்சரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்