ரூ.5000/- அபராதம்..! மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை | Metro Train | Chennai | Tamilnadu

Update: 2023-09-23 05:18 GMT

மெட்ரோ ரயிலில் நெரிசல் மிகு நேரங்களில் ஒரு சில ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்படுவதாகவும், ரயில் கதவுகளை மூடவிடாமல் தடுப்பது போன்ற செயல்களில் பயணிகள் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில் ரயிலை பிடிக்கும் முயற்சியாக கதவுகள் மூடப்பட்டவுடன் கதவுகளை திறக்க பயணிகள் முயற்சிப்பது, தானியங்கி கதவுகள் மூடும் போது கைவசம் உள்ள பொருட்களை தூக்கி வீசி கதவுகளை திறக்க முயற்சிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் பயணிகள் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளது. இதனால் அலுவல் நேரங்களில் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் மேட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்