"பொய்யான தகவல்" -காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மீது பரபரப்பு புகார்

Update: 2024-05-17 10:29 GMT

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸ் என்பவர் போட்டியிட்டார். இவர் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளதாக, பிரேம்குமார் என்பவர் மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலர், ராபர்ட் ப்ரூஸ்-ன் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரம் ஆகியவை மாவட்ட தேர்தல் அதிகாரியால் பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே ஏற்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். புகார் தாரருக்கு இது குறித்து மேலும் சந்தேகம் இருப்பின், உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்