``200'' தாம்பூலங்களில் சீர்வரிசைகள்... ஊரே உற்றுப்பார்த்த காதுக்குத்து - மிரளவிட்ட தாய்மாமன்

Update: 2024-07-01 16:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காதணி விழாவிற்கு மாண்டு வண்டிகளில் சீர்வரிசை கொண்டு வந்து தாய் மாமன் அமர்க்களப்படுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தேடாக்கி கிராமத்தில் ரவி - ராணி தம்பதியின் மகன் முத்தரசனுக்கு காதணி விழா நாகுடியில் நடைபெற்றது. இதனையொட்டி, முத்தரசனின் தாய்மாமன் நாகராஜன், பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்தார். மா, பலா, வாழை, இனிப்புகள் என 200-க்கும் மேற்பட்ட தாம்பூல தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்து அமர்க்களப்படுத்திய நாகராஜன், வெள்ளிப்பாத்திரங்கள், மரக்கன்றுகள் என பரிசுப்பொருட்களால் சகோதரியின் குடும்பத்தாரை மகிழ்வித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்