எங்களுக்கு இது வேண்டாம்" கலெக்டர் ஆபீஸ்க்கு திரண்ட வந்த கிராம மக்கள்! புதுக்கோட்டையில் பரபரப்பு

Update: 2024-09-25 16:14 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில், தங்கள் கிராமத்தை வேறு ஊராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஒரு ஊரே வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கீரை ஊராட்சியின் சில பகுதிகளை பிரித்து ஆயிங்குடி மற்றும் ராயவரம் ஊராட்சிகளுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த செங்கீரை மக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் அழகு தலைமையில் திரண்டு, குடும்ப அட்டை, ஆதார் ஆவணங்களை ஒப்படைக்க வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் தங்கள் ஆவணங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் வீசி விட்டுச் சென்றனர்.\

Tags:    

மேலும் செய்திகள்