சத்தமில்லாமல் கணவன் செய்த காரியம்... தெரிந்த நொடியில் தாண்டவமாடிய மனைவி

Update: 2024-07-25 05:13 GMT

சத்தமில்லாமல் கணவன் செய்த காரியம்... தெரிந்த நொடியில் தாண்டவமாடிய மனைவி

பொள்ளாச்சி அருகே மனைவிக்கு தெரியாமல் சொத்தை விற்றதாக கூறி பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் பெண் தனது இருபிள்ளைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தனது கணவர் சுரேஷ் தங்கள் வசிக்கும் வீட்டை விற்க முயல்வதை அறிந்த அவரது மனைவி சத்தியவாணி, தடங்கல் மனுவை அளித்த நிலையில், அதனை விசாரிக்காமல் வேறு ஒருவருக்கு சொத்து கிரையம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மனைவியிடம் உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து அவர் போராட்டத்தை கைவிடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்