காவல்நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் த*கொலை முயற்சி

Update: 2024-10-02 15:06 GMT

நாகை அருகே காவல்நிலையத்தில் விஷயம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெற்குப்பொய்கைநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரனை, கீழ்வேளூர் போலீசார் விசாரணைக்கு அழைத்த சென்றனர். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய முற்பட்டது தெரியவந்துள்ளது. திடீரென கழிவறை சென்று விட்டு வருவதாக கூறி சென்ற ஊராட்சி தலைவர், தான் மறைத்து வைத்திருந்த விஷப்பாட்டிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வராததால், அதிர்ச்சி அடைந்த போலீசார், பூட்டை உடைத்து அவரை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தற்போது ஊராட்சி மன்ற தலைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் விஷம் குடித்தது உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்