வீடியோ காலில் ஆபாசமாக வரும் பெண்கள் தொட்டால் மொத்தமும் போய்விடும் - பறந்த எச்சரிக்கை

Update: 2024-10-26 16:37 GMT

சமூக வலைத்தளம் மூலமாக சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு ஈரோடு மாவட்ட சைபர் க்ரைமின் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் வேலுமணி பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். முக்கியமாக இளம் பெண்களின் புகைப்படங்களைக் காண்பித்து அவர்களுடன் நெருக்கமாக இருக்கலாம் எனக் கூறி பல ஆண்களை ஏமாற்றி மோசடி நடைபெற்று வருவதாகவும் வேலுமணி தெரிவித்தார். அதே போல வீடியோ காலில் ஆபாசமாகத் தோன்றும் பெண்களைப் பார்ப்பவர்களின் புகைப்படத்தை வைத்து மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூடுதல் கண்காணிப்பாளர் வேலுமணி தெரிவித்தார்.இதே போல போலீஸ் என்று கூறி பலரை நூதன மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபடும் கும்பலிடமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வேலுமணி தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்