கொலை விழுந்தும் எதற்கும் அஞ்சாத மாணவர்கள்.. சென்னையில் அடுத்த அதிர்ச்சி..வைரலாகும் பதைபதைப்பு வீடியோ

Update: 2024-10-11 05:16 GMT

சென்னையில், கல்லூரி மாணவர்களின் தொடர் அத்துமீறல் சம்பவம் பொதுமக்களை அச்சமடைய செய்திருக்கிறது. சென்னை கிண்டியில் அரங்கேறிய சம்பவம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பார்க்கலாம் விரிவாக..


ரூட் தல மோதலில், சக கல்லூரி மாணவர்களால் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையை ஸ்தம்பிக்கச் செய்திருந்தது...

இதன் தாக்கம் இன்னும் சென்னையை விட்டு அகலாத சூழலில், சென்னை மாநகர பேருந்தின் மேற்கூரை மீது ஏறி, பட்டப்பகலில் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர்...


மூர்க்கத்தனமாக துணிகரமாக கல்லூரி மாணவர்கள் அரங்கேற்றி இருக்கும் இந்த அத்துமீறல் சம்பவம் சென்னை, கிண்டி பேருந்து நிலையத்தில் நடந்திருக்கிறது...


தி.நகரில் இருந்து குன்றத்தூர் செல்லக்கூடிய அரசு பேருந்தில், சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேருந்து மேற்கூரை மீது ஏறி கெத்து காட்டும் பெயரில் அரங்கேற்றியிருக்கும் இந்த சம்பவம் குறித்து வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்