80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை... புதுச்சேரியை அதிர வைத்த சம்பவம் | Puducherry | Old Lady

Update: 2024-09-21 06:31 GMT

புதுச்சேரி, துய்மா வீதியில் வசித்து வரும், ரேணுகா ஜெர்மன் குடியுரிமை பெற்றவர். கணவர் உயிரிழந்த நிலையில் வெளிநாட்டில் வசித்து வந்தார். தூய்மா வீதியில் உள்ள தன்னுடைய இடத்தை உறவினர் ராஜேந்திரனுக்கு பவர் கொடுத்த நிலையில், அவர், அந்த இடத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றிக்கொண்ட வழக்கும் புதுச்சேரி நீதிமன்றத்தில் உள்ளது. தற்போது புதுச்சேரி வந்த மூதாட்டி ரேணுகா, ராஜேந்திரன் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இ மூதாட்டி ரேணுகா, முகத்தில் கீறல்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், அதிகாலை 4 மணியளவில் ராஜேந்திரன் மற்றும் 5 பேர் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்