அசுர வேகத்தில் வந்து மோதிய ஜீப்- அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ.. ஸ்பாட்டிலேயே பறிபோன தாய், மகள் உயிர்

Update: 2024-02-12 05:45 GMT

நெல்லை மாவட்டம் திசையன்விளை புறவழிச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். வள்ளியூர் அருகேயுள்ள செம்பாடு கிராமத்தை சேர்ந்த அன்னஜெமிலா, தனது மகளுடன் நாங்குநேரி புறவழிச்சாலையில் ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது, எதிரே வந்த ஜீப் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் மதியழகன், அன்ன ஜெமிலா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த அன்ன ஜெமிலாவின் மகள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்