ஓரினச் சேர்க்கை மோகம் - காட்டுக்குள் சென்றவர்களுக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியில், இரண்டு
வாரங்களுக்கு முன்பு, செயலி மூலம் மர்ம நபர்கள் சிலரை
தொடர்பு கொண்டு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட ஆசை
வார்த்தை கூறி காட்டுப் பகுதிக்கு வர வழைத்தனர். பின்னர்
அவர்களை தாக்கி, நகை, பணம், செல்போன்களை பறித்து
தப்பிச் சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட
போலீசார், மும்பையில் பதுங்கி இருந்த ராமசுப்பு மற்றும்
முத்துக்குமார் ஆகியோரை கைது செய்து மூலைக்கரைப்பட்டி
காவல் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். பின்னர்
அவர்களை நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி
சிறையில் அடைத்தனர்.