பள்ளி மாணவனின் நேர்மையை பார்த்து பாட்டு பாடி பாராட்டிய இன்ஸ்பெக்டர்

Update: 2024-09-22 12:26 GMT

நெல்லை பேருந்து நிலையத்தில் 7 ஆயிரம் ரூபாய் பணத்துடன் கிடந்த பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவனை காவல் ஆய்வாளர் பாடல் பாடி பாராட்டியது நெகிழ வைத்தது... திருமால் நகரைச் சேர்ந்த சரவண குரு பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீடு திரும்புகையில் புதிய பேருந்து நிலையத்தில் 7 ஆயிரம் ரூபாய் பணத்துடன் பர்ஸ் ஒன்று கிடந்ததைக் கண்டு அதை எடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

சரவண குருவின் நேர்மையைக் கண்டு வியந்து போன காவல் உதவி ஆணையர் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார்... அதே சமயம் காவல் ஆய்வாளர் ஹரிஹரன் மாணவர் சரவண குருவை பாடல் பாடி பாராட்டியது மெய்சிலிர்க்க வைத்தது... சிறுவன் சரவண குருவையும், காவல் ஆய்வாளர் ஹரிஹரனையும் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூக வலைதளத்தில் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்