"5 மாதங்களிலேயே இப்படியா?" - அதிர்ச்சியில் நெல்லை மக்கள்

Update: 2024-08-30 10:19 GMT

திருநெல்வேலியில், திறந்து 5 மாதங்களே ஆன பாலத்தின் கான்கிரீட் ஜல்லி கற்கள் பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தியாகராஜ நகர் பகுதியில் கட்டப்பட்ட பாலம், கடந்த 5 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த பாலத்தின் தரை கான்கிரீட் ஜல்லி கற்கள் பெயர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வாகனங்கள் செல்லும் போது பாலம் அதிக அளவில் ஆடுவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்