விபத்தில் காருக்குள் மாட்டி துடிதுடித்த இளைஞர்.. சென்னையை அதிரவிட்ட கோரம் | Chennai

Update: 2024-09-21 09:39 GMT

சென்னையில் அதி வேகமாக சென்று விபத்துக்குள்ளான காரில் சிக்கிக் கொண்டிருந்த இளைஞரை போலீசார் பத்திரமாக மீட்டனர். தேனாம்பேட்டை அண்ணா சாலையில் நள்ளிரவு அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பெயர்ப் பலகை தூணில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முற்றிலுமாக சேதம் அடைந்த நிலையில், காரை ஓட்டி வந்த மண்ணடியை சேர்ந்த சாய்கிருஷ்ணன் என்பவர் காருக்குள் சிக்கிக் கொண்டார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்