பிரியாணி பார்சலில் ரத்தக்கறை.. பிரித்ததும் குலைநடுங்கிய குடும்பம் | Mutton biryani | Ranipet

Update: 2024-07-04 05:12 GMT

முத்துக்கடை பேருந்து நிலையத்தில் உள்ள ஓட்டலுக்கு மட்டன் பிரியாணி சாப்பிட சென்ற ஜெனோவா என்பவர், தனது பிள்ளைகளுக்கு மட்டன் பிரியாணி பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பிரியாணி பொட்டலத்தை பிரித்த போது, பிரியாணி பார்சலிலும், வெங்காய பச்சடி கவரிலும் ரத்தக்கறை படிந்து இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு கணவருடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்