குப்பையில் கிடந்த வைரத்தை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர் - நேரில் அழைத்து பாராட்டிய மேயர் பிரியா

Update: 2024-07-22 15:51 GMT

தூய்மை பணியாளரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் மேயர் பிரியா ராஜன். சென்னை கே.கே.நகரில் உள்ள ராஜமன்னார் சாலையில் தேவராஜ் என்பவர் குப்பைகளுடன் 5,00,000 மதிப்புள்ள வைர நெக்லஸை தவறிவிட்டார். அதனை தூய்மை பணியாளரான அந்தோணி சாமி என்பவர் பத்திரமாக மீட்டு கொடுத்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றார்.இந்நிலையில் அந்தோணிசாமியை நேரில் அழைத்து பாராட்டிய சென்னை மேயர் பிரியா ராஜன் அவருக்கு சன்மானமும் வழங்கி கொரவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்