துணி துவைக்கும் போது திடீரென வந்த வெள்ளம்.. - கழுத்தளவு நீரில் சிக்கி அலறிய குடும்பம்..

Update: 2024-10-01 15:25 GMT

மேட்டுப்பாளையம் அருகே ஆற்றில் துணி துவைக்க சென்ற குடும்பத்தினர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த ஸ்ரீ ராம் என்பவர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 5 பேருடன் துணி துவைப்பதற்காக வச்சினம் பாளையம் பவானி ஆற்றுக்கு வந்துள்ளார். ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றின் மையப்பகுதியில் உள்ள பாறையில் ஏறி தஞ்சமடைந்தனர். இருப்பினும் தண்ணீர் அவர்களின் கழுத்துவரை மூழ்கடித்தவாறு சென்றதால் அச்சமடைந்த அவர்கள் காப்பாற்றுமாறு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்