டெல்லியில் இருந்தே கண்காணித்து மதுரையில் நிறுத்தப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்

Update: 2024-03-01 14:45 GMT

மத்திய வருவாய் பிரிவு புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, பிள்ளமன் பிரகாஷ் என்பவரை அதிகாரிகள் டெல்லியில் இருந்து பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில், சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிள்ளமன் பிரகாஷ் ஏறிய நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட அவரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 2 பைகளில் சுமார் 180 கோடி மதிப்பிலான 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் வகை போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. மதுரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் பிள்ளமன் பிரகாஷ் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், பிள்ளமன் பிரகாஷ் சென்னை கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் என்பதும், மதுரையில் உள்ள ஒருவரிடம் மெத்தபெட்டமைன் வகை போதைபொருளை கைமாற்ற வந்ததும் தெரியவர, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்