தொழிலதிபர்களை அதிர வைத்த ஃபோன் கால்... வசமாக சிக்கிய டிரைவர்..! - கிறுகிறுக்க வைத்த மாஸ்டர் பிளான்

Update: 2024-07-04 17:27 GMT

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் குமார், மதுரை நகரியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் பணியாற்றி வந்துள்ளார். தேனி நாடாளுமன்ற தேர்தலின்போது ஆக்டிங் டிரைவராக வருமானவரி துறையின் புலனாய்வு பிரிவு-2-ல் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் பகுதியில் தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு, தான் வருமான வரித்துறையில் பணி புரிவதாகவும், அவர்கள் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், தனக்கு பணம் வழங்கினால் அதிலிருந்து தப்ப வைப்பதாகவும் போன் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், விக்னேஷை கைது செய்த போலீசார், வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்