"சிறுமிக்கு பாலியல் தொல்லை-வதந்தி"-இளைஞர் த8கொலை

Update: 2024-10-02 16:51 GMT

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக தன்மீது அவதூறு பரப்பி விட்டதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த இளைஞர் வீடியோ வெளியிட்டு த*கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக்ரா மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக ஊர் முழுக்க தன்னைப் பற்றி ஓட்டுநர் ராஜா என்பவர் அவதூறு பரப்பியதாகத் தெரிவித்து தனியார் ஒர்க் ஷாப்பில் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்டார்... இதனால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள பிரகாஷ் குடும்பத்தினர் ராஜாவை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்