மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.. - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-11-28 11:26 GMT

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவுப்படுத்தகோரிய பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கௌல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயசுகின், தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளதாகவும்,

தமிழ்நாட்டிற்கு மட்டும் பாகுபாடு காட்டப்படுவதாகவும் வாதிட்டார்.

இதனை பரிசீலித்த நீதிபதி எஸ்.கே. கௌல், தமிழ்நாட்டில் நல்ல மருத்துவக் கட்டமைப்பு உள்ளதை அறிவேன் என குறிப்பிட்டார்.

பொது நல மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும், மனு தொடர்பாக நிர்வாக ரீதியிலான கோரிக்கையை அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்