சென்னை ஐஐடி வளாகத்தில் குவிந்த பெற்றோர்.. பெரும் பரபரப்பு

Update: 2024-09-12 08:52 GMT

சென்னை ஐஐடி வளாகத்தில் சமீபத்தில் கார் மோதி கலைமான் இறந்ததை தொடர்ந்து, வளாகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களை பேருந்தில் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என ஐ.ஐ.டி. நிர்வாகம் தெரிவித்தது. இதனை கண்டித்து, வேளச்சேரி வளாகத்தில் உள்ள ஐ.ஐ.டி. நுழைவு வாயிலில் பெற்றோர் போராட்டம் நடத்தினர். பள்ளி முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நுழைவு வாயிலில் இருந்து மாணவர்களை அழைத்து செல்ல போதிய பேருந்து இல்லை என்றும், மாணவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக இருப்பதாகவும் குறிப்பிடும் பெற்றோர், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை பெற்றோர்களை அழைத்துச் செல்லும் பழைய நடைமுறை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்