காதல் ஜோடிகளைப் பிரித்த போலீஸ்-த*கொலை செய்த காதலன்

Update: 2024-10-25 00:39 GMT

திருப்பூர் மாவட்டம் கோனேரிவட்டம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயதர்ஷினியை காதலித்து வந்து இருக்கிறார். கடந்த வாரத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூரில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனிடையே பெண்ணின் பெற்றோர்

காவல் நிலையத்தில் புகாரளித்ததைத் தொடர்ந்து இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இரு குடும்பத்தினரிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியபோது ஜோடிகள் இருவரும் பிரிய மறுத்துள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஜெயதர்ஷினியை அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த

நிர்மல்குமார் வீட்டில் தனியாக இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்