நடக்கவே முடியாத அன்பு தோழியை - கரம்பிடித்து வாழ்வு தந்த உயிர் காதலன் - எமனாக விரட்டும் சாதி

Update: 2024-10-01 10:54 GMT

"உன்னை சாகும் வரை விடமாட்டேன்" நடக்கவே முடியாத அன்பு தோழியை - கரம்பிடித்து வாழ்வு தந்த உயிர் காதலன்

எமனாக விரட்டும் சாதியும், குடும்பமும்...


மனைவியை குழந்தைபோல் தூக்கி வைத்துக் கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த இளைஞர் அளித்திருக்கும் புகார் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது..

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி கிராமத்தை சேர்ந்த தம்பதிதான் இந்த சிவசுப்ரமணியனும், முத்து அருளியும்..

முத்து அருளி நடக்க இயலாத மாற்றுத்திறனாளியான நிலையில், தன்னுடன் படித்த கல்லூரி நண்பனான சிவசுப்ரமணியனை காதலித்து கரம் பிடித்திருக்கிறார்..

இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இரு தரப்பிலும் கடும் எதிர்ப்பு..இந்நிலையில், வீட்டார் எதிர்ப்பையும் மீறி கடந்த 2017-ல் பதிவுத் திருமணம் செய்திருக்கின்றனர்...

நெல்லை, பேட்டை பகுதியில் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது..

குழந்தை பிறந்த சந்தோஷத்தில் வாழ்க்கையை நகர்த்த காத்திருந்த தங்களுக்கு, தன் குடும்பத்தாரே எமனாக வந்து நிற்பதாக மனம் குமுறுகிறார் சிவசுப்ரமணியன்..

சிவசுப்ரமணியனின் வீட்டார் முத்து அருளியிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது..

இதனால், ஆத்திரமடைந்த சிவசுப்ரமணியன், தான் பணத்திற்காகவும், நகைகளுக்காகவும் முத்து அருளியை திருமணம் செய்ய வில்லை என காதல் மனைவிக்காக அவர் வீட்டாரை எதிர்த்து சண்டையிட்டிருக்கிறார்..

இதனால், விரக்தியடைந்த அவரின் வீட்டார், தம்பதியின் குழந்தையை கொல்ல முயல்வதாகவும், வேறொருவரை மணமுடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுமாறு முத்து அருளிக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது..

இவ்வாறு, கடும் நெருக்கடிகளை சந்தித்து வந்த சிவ சுப்பிரமணியன்... மதுரை, திருப்பரங்குன்றத்திற்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்திருக்கிறார்..

இந்நிலையில், தன்னையும், தனது மனைவி, குழந்தையையும் குடும்பத்தார் கருணை கொலை செய்து விடுவார்களோ என பயமாக இருப்பதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அவர் புகாரளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

குடும்பத்தாருக்கு பயந்து தாங்கள் பெற்றெடுத்த குழந்தையை நண்பர் ஒருவரிடம் கொடுத்து வளர்த்து வருவதாக கூறிய இந்த தம்பதியின் குமுறலும், உயிர் பயமும் மனதை உலுக்கியிருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்