கடன் தொல்லையால் நார் கம்பெனி உரிமையாளர் த*கொலை

Update: 2024-09-28 00:11 GMT

நார் கம்பெனி உரிமையாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் தரணம்பேட்டயை சேர்ந்தவர் நூர்பாஷா நார் தயாரிக்கும் கம்பெனியை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக நார் விற்பனையில் லாபம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் நூர்பாஷாவிடம் கடன் வாங்கியவர்கள் அதனைத் திரும்பக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதே போல் நூர்பாஷாவுக்கு கடன் கொடுத்தவர்களும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த நூர்பாஷா தனது நார் கம்பெனியிலேயே தூக்கிட்டு த*கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்