ஊசி போட்ட மறு நொடியே பிரிந்த இளைஞரின் உயிர் - கோவையில் அதிர்ச்சி

Update: 2024-09-23 05:06 GMT

கோவை அருகே தவறான ஊசி மருந்தால் இளைஞர் உயிரிழந்து விட்டதாக கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செஞ்சேரிமலையைச் சேர்ந்த கிட்டான்-ரங்காள் தம்பதியின் இளைய மகன் பிரபுவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவரை அருகில் உள்ள மெடிக்கல் சென்டருக்கு அழைத்துச் சென்று ஊசி போட்ட நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, தவறான மருந்தால் தனது மகன் உயிரிழந்து விட்டதாக குற்றம்சாட்டிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்