கொடைக்கானலில் சென்னை இளைஞர்கள்.. ஏதேதோ சொல்லி செய்த கேவலமான செயல்..

Update: 2024-09-29 02:52 GMT

கொடைக்கானலில் ரிப்போர்ட்டர்கள் என்ற பெயரில், மசாஜ் சென்டர் பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக நடந்துகொண்டு, வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலில் அரசு அனுமதி பெற்ற மசாஜ் சென்டருக்கு சென்னையை சேர்ந்த, 4 நபர்கள் சென்று, பெண் ஊழியர்களிடம் அநாகரீகமாக நடந்து, ஆடைகளை கிழித்த‌தாக கூறப்படுகிறது. அவர்கள் சொல்வதை பெண் ஊழியர்கள் மறுத்த‌தால், தவறாக நடப்பதாக போலீசில் புகார் அளித்துவிடுவதாக இளைஞர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், பெண் ஊழியர்களை வெளியேற விடாமல் கதவையும் பூட்டி அரஜாகத்தில் ஈடுபட்டுள்ளனர். கதவு கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பெண்கள் வெளியே சென்ற போதும், ஓட ஓட துரத்திச் சென்று வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். தகவலறிந்து சென்ற செய்தியாளர்கள் அவர்களை பிடித்து கேட்டபோது ஆபாசமாக திட்டியதோடு, வாக்குவாத‌த்திலும் ஈடுபட்டனர். விசாரணையில், போலியான ரிப்போர்டர் கார்டு வைத்திருந்த‌து தெரிய வந்த‌து. இதையடுத்து, அந்த நபர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்