500 சாம்சங் ஊழியர்கள் திடீர் கைது... காஞ்சி அருகே பரபரப்பு | Kanchipuram

Update: 2024-10-01 15:23 GMT

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள, சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்ந்து 20 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு தலையிட்டு 8 அம்ச கோரிக்கைகளை சுமுகமான முறையில் நிறைவேற்ற வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். முன் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் நடந்நததாக கூறப்படும் நிலையில், 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர் .

Tags:    

மேலும் செய்திகள்