ஜாமினில் எடுத்த வக்கீலை வீடு புகுந்து வெட்டிய ரவுடி.. நடுவில் சிக்கிய மனைவிக்கு நேர்ந்த விபரீதம்..

Update: 2024-10-01 16:28 GMT

சேலத்தில், ஜாமினில் எடுத்த வழக்கறிஞரை வெட்டிக்கொல்ல முயன்று தப்பியோடிய பிரபல ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் சின்னதிருப்பதி புதியகுருக்கள் காலனியை சேர்ந்த ஆஷித்கான், அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டிற்கு வந்த ரவுடி பாலாஜி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆஷித்கானை பெரிய கத்தியால் கழுத்தில் வெட்டினார். இதை தடுக்க வந்த ஆஷித்கானின் மனைவிக்கும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கூச்சலிட்டதால் அங்கு அக்கம்பக்கத்தினர் வந்த நிலையில், பாலாஜி, இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார், ரவுடி பாலாஜி மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறையில் இருந்தபோது ரவுடி பாலாஜியை ஆஷித்கான் ஜாமினில் வெளியே எடுத்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள ரவுடி பாலாஜியை, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்