மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - சிக்கியவர்களுக்கு ஜாமின்..? நீதிபதி அதிரடி உத்தரவு | Krishnagiri

Update: 2024-10-01 16:21 GMT

போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், கிருஷ்ணகிரி தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 14-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. இந்த மனுக்கள் நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தபோது, 43 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அதற்கு காவல் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை அக்டோபர் 14-ஆம் தேதி பிறப்பிப்பதாக அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்