காமராஜர் குறித்த பேச்சு.. வருத்தம் தெரிவித்த ராஜீவ் காந்தி

Update: 2024-10-23 07:29 GMT

காமராஜர் குறித்த பேச்சு.. வருத்தம் தெரிவித்த ராஜீவ் காந்தி

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் காமராஜர் குறித்து தாம் பேசியது காங்கிரஸ் தோழர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.காமராஜர் மீது பற்று கொண்ட தலைவர்களும் நாடார் சமூக அமைப்பினை சேர்ந்த தலைவர்களும் தன்னிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெருந்தலைவர் காமராஜரை சிறுமைப்படுத்தவோ, குறைத்து பேசவோ தனிப்பட முறையில் தனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை என்றும், தாம் பேசியதன் மூலம் மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பெரும் தலைவர் காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் தனது வருத்தத்தை மனதார தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்