கடம்பூர் ராஜு பரபரப்பு குற்றச்சாட்டு | Kadambur Raju | Katchatheevu | ThanthiTV

Update: 2024-09-09 17:07 GMT

காங்கிரஸ் கட்சி கச்சத்தீவை தாரை வார்த்ததால் தான் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தருவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சண்முகநாதன், செல்ல பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, மாநில அரசு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்