``இது புதுசா இருக்குண்ணே.. ஊதுங்க ஊதுங்க''.. போலீசையே `ஊத' சொல்லிய வாகன ஓட்டிகள் - வைரலாகும் வீடியோ

Update: 2024-10-03 13:03 GMT

``இது புதுசா இருக்குண்ணே.. ஊதுங்க ஊதுங்க''.. போலீசையே `ஊத' சொல்லிய வாகன ஓட்டிகள் - வைரலாகும் வீடியோ

#erode #police #fight #viralvideo #thanthitv

காவலர்கள் தான் வாகன ஓட்டிகளை நிறுத்தி ஊதச் சொல்லிக் கேட்டிருப்போம்...ஆனால்

ஈரோடு - தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில்

உள்ள சோதனை சாவடியில் காவலர் ஒருவரை ஊதச் சொல்லி வாகன ஓட்டுநர்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னபள்ளம் பகுதியில் அமைந்துள்ள காவல் சோதனை சாவடியில் காவலர் செல்வகுமார் மது போதையில்

அவ்வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்தி வழக்குப் பதியாமல் இருக்க 2000 ரூபாய் கேட்டதாகவும், தொடர்ந்து அந்த ஓட்டுநரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சக ஓட்டுநர்கள் காவலரை சூழ்ந்து வாக்குவாதம் செய்த நிலையில் காவலர் செல்வகுமார் இறுதியில் மன்னிப்பு கேட்டுள்ளார்.. இந்த சம்பவம் குறித்து செல்வகுமாரிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்